Tuesday, September 25, 2018

So Hum - I am that I am

www.supremeholisticinstitute.com
SOHUM

I am that I am.
As is the human mind
So is the cosmic mind.
Sohum meditation is breathing technique.
When you inhale, you inhale universal energy,
When you exhale, you exhale your ego ("I" Aham)
We repeat this sohum mantra 21,600 times in a day,even during sleep.
When you inhale sound SO is produced
When you exhale sound HUM is produced.
Its an Ajapa Mantra., it means without moving lips along with breathing, one has to produced sound SOHUM.

Love is Eternal

Love is Eternal- No Love No World.
www.supremeholisticinstitute.com

To Love is an expression of submitting act,
submitting thru emotional & physical contact,
intimacy a relation of  millions of sensitive threads tingle together,
that echoes the most sensual music to the soul higher,
theses are the moments in life that mind into a conscious feeling, 
an ultimate faith to open outer & inner self to someone who is willing to do the same,
to bare everything in front of the enthralled eyes to be admired & tasted of what one have, 
letting go of the worries of the world for a moment being together,
to be free to express the desire to appreciate the body & soul in the sensual rhythm,
to feel the selfless care in each touch & kisses,
 a dance of intimacy were life finds it purpose live & death finds the courage to be,
dont be a fool to seek intimacy as selfish pleasure,
its a journey to be accompanied  with honesty,
to scale this life of fixed reality onto the edge of eternity, 
its were the hearts units to be in the godly grace,
make selfless love to understand the divine mystery, 
love is a way to live , love in bliss to be content.

Wednesday, September 5, 2018

Eternal Sithargal wisdom is Vedic Eternal wisdom

நள்ளிரவில் தியானம் செய்வதன் நோக்கம்.
**************************************************

ந ள்ளிரவில் தியானம் செய்வதன் நோக்கம்
என்னவென்றால் அந்த நேரத்தில் மற்ற
கோள்களை விட சந்திரனின் ஈர்ப்பு விசைதான் பூமியில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும்.

சந்திரன் மனகாரகன் என்பதாலும் நம் உடல் 75 சதவீதம் நீரால் ஆனது என்பதாலும் மனம்
விரைவில் அடங்கும்.

எகிப்திய பார்வோனின் இரத்தவழி வம்சங்களாகிய 13 முதல் 20 குடும்பங்களைச்
சேர்ந்தவர்கள்தான் இந்த இலுமினாட்டிகள்.

சில உலக அரசியல் தலைவர்களும்,
மிகப்பெரிய பணமுதலைகளும்,
கலைத்துறையினரும், விஞ்ஞானிகளும் இதில் அடக்கம். இவர்கள் வரலாறு பல
நூற்றாண்டுகளைக் கடந்தது. உலகில்
இதுவரை நடைபெற்ற அத்தனை
புரட்சிகளையும், இரு உலகப்போர்கள் உட்பட
அத்தனை யுத்தங்களையும் தங்கள் சொந்த
ஆதாயத்துக்காக நடத்தியவர்கள் இவர்கள்தான்.

உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள்தான்
இலுமினாட்டிகள்.

உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள்தான்
இலுமினாட்டிகள்.

யூதர்கள் பாபிலோனியர்கள் எகிப்தியர்கள்
அனைத்து இனத்தவர்களும் வெவ்வேறு
வகையில் கடவுளை பற்றி கூறுகிறார்கள்
அவ்வளவுதான்.

நாம் கற்பனைகூட செய்ய முடியாத அளவு
பிரபஞ்சம் பிரமாண்டஆனது. நொடிக்கு
இருப்பதை விட 90 மடங்கு வேகமாக
விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

ஸ்டீவன் ஹாக்கிங் கூறியது போல ஒவ்வொரு கருந்துளையும் வேறு பிரபஞ்சங்களின் நுழைவாயில்களாக கூட இருக்கலாம்.

எதற்காக ஐயா முக்தி பெற வேண்டும்? முக்தி
என்பது ஒன்றும் இல்லாத சூன்யம். வாழ்க்கை அற்புதமானது. பிரமாண்டமானது. அது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.

என்னை பொருத்தவரை எத்தனை கோடி
ஜென்மங்கள் எனக்கு கிடைத்தாலும் வாழ
தயார். ஒன்றுமே இல்லாத ஜடமாக இருப்பதை விட எதையாவது உணர்வது சிறந்த்து இல்லையா?

நமது இந்த தேடல் மதம் மொழி இனம்
அனைத்திற்கும் அப்பாற்பட்டது.
எல்லா புராணங்களும் எல்லா
இதிஹாசங்களும்
ஒரே விஷயத்தைதான் வலியுருத்துகிறது
மனதை அடக்கினால் மார்க்கம் உண்டென்று.

தியானத்தை யாராலும் யாருக்கும் கற்று
கொடுக்க முடியாது.
தன்னை அறிந்தால் அனைத்தையும்
அறியலாம். உன்னை நீ அறிந்தால் உலகத்தை நீ அறியலாம். தன்னை அறிய தனக்கொரு கேடில்லை. தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.

பிரபஞ்சத்தை படைத்த அந்த மாபெரும்
ஆற்றல்தான் எனக்கு குரு.
ஓம் என்ற ஒலியின் அதிர்வுதான் இந்த
பிரபஞ்சத்தையே உருவாக்கியது. உடுமண்டல கோள்களின் காந்தவிசை நம் உடல்அணுக்களை எந்நேரமும் அதிர வைத்து கொண்டே இருக்கிறது. அதுவும் பல்வேறு உருப்புகளின் அணுக்கள் பல்வேறு விதமாக அதிர்கிறது.

எனவே நமக்கு உடலை சார்ந்து பல்வேறு
எண்ணங்கள் உதிக்கிறது. ஓம் எனும் எழுத்தின் அதிர்வு உடலின் அனைத்து அணுக்களையும் ஒரே மாதிரி அதிர வைக்கிறது. இதனால் நமது மனம் பற்பல சிந்தனைகளில் இருந்து விடுபட்டு ஒரு சிந்தனையில் குவிகிறது.

எனவே நமக்கு மன அமைதி கிடைக்கிறது.
காய கற்பம் பற்றி -பூமியின் சுழற்சி
காரணமாக நாம் நம் உடலின் மையத்தை
நோக்கு இழுக்கப்படுகிறோம். அதனால்
உடலில் வளர்சிதை மாற்றங்கள் நிகழ்கிறது.

நாம் இதுவரை பல்வேறு வழிகளில் சேர்த்து
வைத்துள்ள கழிவுகளை கல்பம் உண்டு
வெளியேற்றுகிறோம்.

நமக்குள் இருக்கும் அற்புத ஆற்றல்களை
அடைய முடியாமல் தடுக்கும் சுவர்தான்
மனம்.

ஐயா நான் கேட்டது நீங்க நம்பறீங்களா
என்றுதானே ஒழிய அழிய போவதாக நான்
சொல்லவில்லை. இந்த உலகம் நிச்சயம் சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு பிறகுதான்
அழியும்.

சில விடயங்களை நாம் நேரடியாக உங்களுக்கு கூற இயலாது. சில இரகசியங்களை தாங்கும்
மனோதிடம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

இன்னும் உங்களின் பல லட்சம் தலைமுறை
இப்பிரபஞ்சத்தில் வாழும் இது சத்தியம்.

சூரியனில் இருந்து வெடித்து சிதறிய
கிரகங்கள் மெல்ல மெல்ல சூரியனை நோக்கி ஈர்க்கபட்டு சூரியனால் விழுங்கபடும். இது நடக்க சுமார் 400 கோடி ஆண்டுகள் ஆகும்.

ஆனால் இன்னும் ஒரு நூற்றாண்டில் மனிதன் வேறு கிரகத்து குடிபெயர்ந்து விடுவான்.

கிரகம் விட்டு கிரகம் தாவி மனிதன் தன்
இனத்தை காப்பாற்றி கொள்வான்.
உண்ணும்போது உயிரெழுத்தை உயரவாங்கு
உறங்குகின்ற போதெல்லாம் அதிவேயாகும்
பெண்ணின்பால் இந்திரியம் விடும்போதும்
அதுவே ஐயா.

இடங்கலை- மின்புலம்
பிங்கலை- காந்தபுலம்
சுழிமுனை- மின்காந்த சக்தி

சுழிமுனை மூச்சென்பது நெற்றியில்
இருநாடிகளும் சிறு துடிப்புகளாக தெரிவதே.

மேஜிக் என்பது அதிவேக அசைவுகளினால்
திறம்பட செய்வது. அதாவது குறிப்பட்ட
வேகத்தை மட்டுமே கண்களால் பார்க்க
முடியும். அதிவேக செயல்பாடு மூளையால்
கணிக்க முடியாதது.

நாம் தொடர்ந்து மூச்சையே கவனிக்கும்
போது ஒருகட்டத்தில் சுவாசம் நின்று
சுழிமுனையில் நுண்ணிய துடிப்புகளாக
மாறும். இது ஆரம்பத்தில் ஒரு நொடி பிறகு 2
3 4 என அதிகரித்து கொண்டே செல்லும். அந்த கால இடைவெளிதான் நிர்விகல்ப சமாதி.

கீரைக்கு இணையான சத்துக்கள் எந்த
அசைவத்திலும் இல்லை. புலால் உண்பதால்
இரைப்பைக்கு உணவு சென்ற பின்னும்
பாக்டீரியாக்கள் பெருகி ரத்தத்தில் கலந்து
மனதில் ஆக்ரோஷ எண்ணங்களை
தூண்டுகிறது.

ஏன்சியன்ட் ஏலியன்ஸ் நிகழ்ச்சியை நன்கு
கவனித்தால் அவர்கள் எதையும் முடிவாக
சொல்லாததை கவனிக்கலாம். ஆனால் நானும் அதனை மறுக்கவில்லை. பிரபஞ்சம்
பிரமாண்டமானது. வேற்று கிரகங்களில்
உயிரணங்கள் வாழ ஏராமான சூழ்நிலைகள்
உள்ளது.

முடிவில்லா பிரபஞ்சம் என சொல்வது தவறு.
அதற்கும் எல்லை உண்டு. ஆனால் அது
நொடிக்கு நொடி விரிவடைந்து கொண்டே
இருக்கிறது.

தீப ஒளி தியானம், தொடர்ந்து கண்சிமிட்டாமல் தீப ஒளியை பார்த்துவிட்டு மெல்ல கண் மூடினால் உள்ளே அந்த பிம்பம் சிறிது நேரம் தெரியும். முடிந்தளவு அதையே பார்க்க முயலுங்கள். சில நொடிகளில் அந்த ஒளி பக்கவாட்டில் சென்று மறைந்துவிடும்.

மீண்டும் கண்ணை திறந்து தீபத்தை பாருங்கள்.

மறுபடியும் கண்ணை மூடி வழக்கம்போல
செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வர
மனக்கண்ணில் ஒளி தெரியும் அந்த கால
இடைவெளி அதிகரிக்கும். அந்த கால
இடைவெளிதான் மன ஒருமைபட்ட நிலை.

சாமி ஆடுவது என்பது வேகமாக குண்டலினி
ஏறி இறங்கும் ஒரு செயல்பாடு. நாம் மிகவும்
உணர்ச்சி வசப்படும்போது நம்மை அறியாமல் குண்டலினி வேலையை காட்டும். அதை அணுவளவும் எதிர்பார்காத உடலும் மனமும் பயந்து ஆடத் தொடங்குகிறோம். ஆனால் யோகிகள் இதை தானாக ஏற்றுவதால் பயம் இல்லாமல் அதை எதிர்கொள்வர்.

பேயை அதிகம் நம்புவது பெண்கள்தானே!
அதனால் அவர்கள் பேயின் அலைவரிசையில் தொடர்பு கொள்ள முடிகிறது. நீங்களும் நம்பிபாருங்கள் பிறகு தெரியும்.

பிரபஞ்சத்தில் பதிந்த நமது எண்ணங்களை
தொடர்பு கொள்ளும் மீடியம் தான் மூளை.

அந்த எண்ணங்களின் வலிமையால் வேறு
ஒருவரின் மூளையை கூட மீடியமாக
தேர்ந்தெடுக்க முடியும். அதுதான்
கூடுவிட்டு கூடு பாய்தல்.
பத்து நாட்களாக மருத்துவமனையில்
படுத்துகிடந்தவர் எழுந்து சாமி அழைப்பதாக
சொல்விட்டு சாக காரணம் அவருக்கு
கருப்புசாமி என்கிற உருவத்தின்மீது அதீத
நம்பிக்கை இருந்ததால் அவரது ஆழ்மனம் அவர் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தது.

அவரின் இன்றே இறந்து விடுவோம் என்ற
ஆழ்மன நம்பிக்கைதான் அவரை கொன்றது.

நம் மூளையின் ஒரு பகுதி உணர்ந்த்தை சில
மைக்ரோ வினாடிக்கு பிறகுதான் நினைவு
மனம் உணர்கிறது. இந்த கால இடைவெளிதான் ஏற்கனவே நடந்ததாக சந்தேகிக்க வைக்கிறது.

மூளை என்பது மீடியம். மனம் என்பது
பிரபஞ்ச அணுக்களில் பதிந்திருக்கும் நம்
எண்ணங்கள். மூளை என்கிற மீடியம் மனதை
தொடர்பு கொள்ளாமல் இருப்பதே சமாதி
நிலை.

1.கால பயணத்தை பற்றி குவாண்டம்
இயற்பியல் (Quantum Physics)
ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பதிலைக்
கொடுத்தது. குவாண்டம் இயற்பியல்
சமீபத்தில் மிகவும் புரட்சிகரமான
கருத்துகளை வெளியிட்டு வருகிறது.
நாம் வாழும் பிரபஞ்சம் (Universe) என்பது
ஒன்றுதான் என்று நம்பிவந்த வேளையில்,
பிரபஞ்சம் என்பது ஒன்றல்ல, பல பிரபஞ்சங்கள்
(Multiverse) உள்ளன என்றும், ஒவ்வொரு
பிரபஞ்சத்துக்கும் சமமான, ஒன்று போல
இன்னுமொரு பிரபஞ்சம் அதற்குச் சமாந்தரமாக
(Parallel Universe) இருக்கின்றது என்றும்
குவாண்டம் இயற்பியல் சொல்கிறது.
ஒன்றுக்கொன்று சமாந்தரமாக, ஒன்று போல
பிரபஞ்சங்கள் இருப்பதனால், ஒரே பிரபஞ்சம்
போலக் கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள்
இருக்கின்றன என்றும் குவாண்டம் இயற்பியல்
கூறுகிறது. இதைப் பல கணிதச் சமன்பாடுகள்
மூலமாகக் கோட்பாடு ரீதியாகக் குவாண்டம்
இயற்பியல் உறுதி செய்கிறது.
அண்டங்கள் ஒன்று போலக் கோடிக்கணக்கில்
இருக்கின்றன என்பது மட்டுமில்லாமல், அந்தக்
கோடிக்கணக்காக இருக்கும் ஒவ்வொரு
அண்டத்திலும், நமது பூமியும் அதில் வாழும்
நாமும் இருந்து கொண்டிருக்கிறோம். அதாவது
நானும், இதை வாசித்துக் கொண்டிருக்கும்
நீங்களும் ஒவ்வொரு அண்டத்திலும்
ஒவ்வொருவராக, கோடிக்கணக்கில் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு அண்டத்தில் வாழ்ந்து வரும்
நமக்குள் ஏதோ ஒரு வகையில் தொடர்பு
இருந்துகொண்டே இருக்கும். இதை
வாசிக்கும்போது, உங்களுக்குச் சிரிப்புத்
தோன்றலாம். ‘அறிவியல் என்ற பெயரில்
நன்றாகக் கணக்கு விடுகிறார்கள்’ என்றும்
தோன்றலாம்.
ஆனால் நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும்
உலகில் உள்ள முதன்மை இயற்பியலாளர்கள்
அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கும்
கோட்பாடு இது.

2.விதியை உன் முன்ஜென்ம எண்ணங்களால் நீதான் தீர்மானித்தாய்.

3.ஒளிவட்டம் என்பது நம் உடல் அணுக்கள்
வெளிப்படுத்தும் போட்டான்ஸ் ஆகும்.
அணுக்களின் மின்காந்த சக்திக்கு ஏற்ப இது
அதிகமாகவோ குறைவாகவோ வெளிப்படும்.

4.சந்திர கலை- இடது நாசியில் நடைபெறும்
சுவாசம் குளிர்ச்சி. உடல் வெப்பத்தை
குறைக்க இதில் சுவாசம் நடக்கும். சூரிய
கலை- வலது நாசியில் நடைபெறும் சுவாசம்
வெப்பம். உடல் வெப்பத்தை அதிகபடுத்த
இதில் சுவாசம் நடைபெறும். உடல்
வெப்பத்தை 37°Cல் சமநிலைபடுத்த இரண்டும் மாறி மாறி நடைபெரும்.

5. விதி என்பது கர்மாவிற்கான ஒரு
செயல்பாடு. அதை செயல்படுத்துவது நவ
கிரகங்கள். நாம் பிறக்கும்போது கிரகங்கள்
இருக்கும் இடத்தை பொருத்து நம் மூளை ஒரு
குறிப்பிட்ட அலைவரிசையில் இருக்கும். அதன் பிறகு ஏற்படும் கிரகங்களின் இடமாற்றத்திற்கு ஏற்ப மூளை வெவ்வேறு அலைவரிசைகளில்
தொடர்புபடுத்தப்படும். இது நம் சுய
நினைவின்றி தானியங்கி இயக்கத்திற்கு
கிரகங்களால் தல்லபடும். உதாரணம், நன்றாக இருந்த ஒருவர் திடீரென்று வீட்டில் அற்ப விஷயத்திற்கு சண்டையிட்டு தற்கொலை செய்துகொள்வார். கிரகங்கள் ஒரு Frequency
Changer. நம் வாழ்க்கையில் கிரகங்களின் பங்கு மூளையின் அலைவரிசையை மாற்றுவதே.

6. விஞ்ஞானத்தின் தேடல் தன்னை அறியும்
மெய்ஞானத்திலே தான் முடியும்.

           
கேள்வி .- தியானத்தில் நிலைத்து சமாதி நிலை கூடும் பொழுதுதான் வினைகளை அழிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் தியானம் செய்யும் போது சம்ஸ்காரங்கள் எண்ணங்களைத் தூண்டிக் கொண்டே இருந்தால் நம் மனம் எப்படி தியானத்தில் ஒடுங்கும் ?

பதில் - கேள்வி நியாயமானதுதான் என்றாலும், இது குறித்து பலவிதமான விளக்கங்களைப் பதிவு செய்திருக்கிறேன். படித்துப் பார்த்தீர்களானால் ஓரளவு புரியும். எனினும் கேள்வி கேட்டதினால் சொல்கிறேன்.  மனத் தூய்மை, ஒழுக்கமான வாழ்வு, தன்னலமற்ற தொண்டு மனப்பான்மை இவற்றால் பழைய வாசனைகளை நம்மால் கட்டுப்படுத்தி அடக்கி வைக்க முடியும். இதற்காகவே இயமம், நியமம் போன்ற பயிற்சிகளை முன் வைத்திருக்கிறார்கள். மேலும் உடல் ஆரோக்கியமின்றி ஏற்படும் தடைகளைப் போக்கவும், நீண்ட நேரம் தியானம் செய்ய உடல் தயாராகவும் ஆசனம் தரப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிராண சக்தி வலிமை இழந்தால் மனம் சலனமடையும் என்பதால் பிராணாயாமம் மூலம் ப்ராணசக்தியை உடலில் சமன் செய்து கொள்கிறோம். அப்போது புலன்களில் இருந்து மனதைப் பிரிக்கும் பயிற்சியாகப் பிரத்தியாகாரம் விளங்குகிறது. இவ்வளவு பயிற்சிகளையும் முறையாகக் கடைபிடித்தாலன்றி மனதின் பழைய கர்ம பீஜங்களை கட்டுக்குள் கொண்டு வருவது கடினம். முற்றும் துறந்த ஞானிகள் கூட இதனால்தான் ஞானத்தை அடைய தாமதமாகியிருக்கிறது.

புத்தர் எல்லாவற்றையும் துறந்தவுடன் ஞானமடைந்து விடவில்லை. கடினமான தியான முயற்சியும், இடைவிடாத மனப் போராட்டமும் கடந்துதான் அவர் ஞானமடைந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. பட்டினத்தார் சகல செல்வங்களையும் துறந்து ஞானமடைவதற்குள் அவர் அடைந்த இன்னல்களும், மனப் போராட்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இதை அவர் பாடல்களில் உள்ள புலம்பல்கள் மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் சீடர் பத்திரகிரியாரும் அப்படியே. எனவேதான் பதஞ்சலி யோகசூத்திரம் மனத் தூய்மையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. சித்தர்கள் கூட தந்திர மார்க்கத்தை கடை பிடித்து ஞானமடைந்தாலும் கூட விஷயங்களை மறைத்து வைத்ததும், மறைமுகமாகச் சொல்வதும் இதனால்தான். அதாவது மனவடக்கம் இல்லாதவர்கள் தந்திர முறையில் சித்திகளைப் பெற்று கொடிய செயல்களில் ஈடுபட்டு விடுவார்கள் என்பதற்காகவே

மனதைத் தூய்மைப்படுத்துவது என்றால் அது, வாசனையை, சம்ஸ்காரங்களை கட்டுப்படுத்துவதே. முதலில் கர்மாசயத்திற்கும் வாசனைக்கும் இடையே உள்ள பிணைப்பை துண்டிக்க வேண்டும். இதை எப்படிச் செய்வது என்றால், அதற்கு இரண்டு வழிகள் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று தவம். நம்மைத் தூண்டும் உந்துவேகங்களுக்கு அடிமைப்படாமல், அது தூண்டும் செயல்களைச் செய்யாமல் இருப்பது. இதையே சும்மா இருப்பது என்பார்கள். ''சும்மா இருக்கும் சுகம்'' என்கிறார்களல்லவா ? அது. அந்தச் செயலைச் செய்யாமல் தவிர்த்து, அந்த சூழலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வரும் போது அந்த வேகங்கள் பலவீனமடைந்து விடும். எனினும் மனம் தூய்மையடையாத போது தியானம் செய்வது பகீரதப் பிரயத்தனமே. இரண்டாவது, நற்கர்மங்களைச் செய்தல். இதன் மூலம் மனதில் நல்ல சம்ஸ்காரங்கள் உருவாகி விடுகின்றன. அவை அதிகரிக்கும் அளவுக்கு தீய சம்ஸ்காரங்களை அமுக்கி விடுகின்றன. தியானம் செய்து வரவர அவ்வப்போது ஏற்படும் இறையாற்றலின் தொடர்பால் தீய சம்ஸ்காரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடுகின்றன. இதனால் ஆசைகள் தூய்மையடைந்து மனமும் தூய்மையடைகின்றது.

மனமானது எந்தப் பொருளை அறிய வேண்டுமோ அந்தப் பொருளின் வடிவை எடுக்கிறது. மனதின் இந்த உருமாற்றத்தையே விருத்தி என்கிறார்கள். இந்த விருத்திகளின்றி அறிவு உதயமாவதில்லை. நாம் தூங்கும் போது எந்த விருத்தியுமில்லை. நமது மனமானது பல அடுக்குகளாக, பல நிலைகளாக உள்ளது. ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு விதமான குறிப்பிட்ட விருத்திகள் உள்ளன. புற அடுக்குகளில் விருத்திகளால் எழும் எண்ண அலைகள் ஸ்தாலமானவை. அவை புறப் பொருளைப் பற்றியவை. உயர்ந்த அடுக்குகளில் இருந்து கவிதை, கற்பனை, தத்துவ ஆராய்ச்சி போன்ற விருத்திகள் ஏற்படுகின்றன. ஆழ்மனதின் அடுக்குகளில் இருந்தே ஆன்மிகம் கலந்த புலன் கடந்த உண்மைகள் அறியப்படுகின்றன. நாம் சாதாரணமாக தூலநிலை எண்ணங்களை மட்டுமே உணர்கிறோம். ஆனால் மனதைத் தூய்மைப் படுத்துவதன் மூலமும், தியானம் செய்வதன் மூலமும் ஆழ்நிலைக்குச் சென்று நுண்ணிய எண்ண அலைகளோடு தொடர்பு கொள்ள முடியும். அந்நிலையில்தான் ஆன்மிகப் பேரொளி தரிசனம் வாய்க்கும்.

அதாவது ஆன்மாவுக்கும் புறப் பொருளுக்கும் தொடர்பை ஏற்படுத்துவது அறிவு. அப்படி தொடர்பு கொள்ள மனம் என்பது வேண்டியதிருக்கிறது. மனம் இருந்தால் மட்டும் போதாது, புறப் பொருளின் வடிவை அது எடுக்கும் விருத்தி என்கிற நிலை வேண்டும். ஆன்மாவின் ஒளியானது இந்த விருத்தியின் மீது விழும் போதுதான் அறிவு உதயமாகும். விருத்தி என்பது எண்ண அலைகளே. புற உலகைப் பற்றிய ஸ்தூல விருத்திகள் குறைந்த அளவே ஒளியைப் பிரதிபலிக்கின்றன. ஏனென்றால் புற உலகில் மனதின் விருத்தி அதிகரித்து விடுவதால் ஆன்மாவின் ஒளிப் பிரதிபலிப்பு குறைந்து விடுகின்றது. எனவே ஆன்மாவின் தன்ன்றிவு என்கிற நிலையும் குறைந்து விடுகின்றது. ஆனால் உள்முகமாக விளங்கும் நுண் விருத்திகள் அதிக ஒளியைப் பிரதிபலிக்கின்றன. ஒளியைத் தக்கவைத்துக் கொள்கின்றன. எனவே தன்றிவு மிக்கதாக விளங்குகின்றன. எனவேதான் தியானத்தில் உள்ளே போகப் போக பல வகையான ஒளி தரிசனத்தைக் காணலாம் என்கிறார்கள். மனதின் ஆழத்தில் மூழ்க மூழ்க சாதகன் ஒளியிலேயே மூழ்கி விடுகிறான். இதுவே ஆன்மாவை அடைந்து விட்டதற்கான அறிகுறி.

எனவே எல்லோருக்குள்ளும் ஆன்மாதான் உள்ளது என்றாலும், இந்த விருத்திகளின் இயல்பைக் கொண்டே ஒருவருக்கொருவர் வேறுபடுகிறோம். தூய விருத்திகள் அதிகம் உள்ளவர் அதிக ஆன்ம ஒளியைப் பிரதிபலிக்கிறார் என்று பொருள். இவ்வளவு தூரம் விருத்திகளைப் பற்றிச் சொல்வானேன் ? என்றால், தூய, நுண்ணிய விருத்திகள் உள்ளவர்களே தியானத்தில் நிலைக்க முடியும். சாதாரண நிலையில் விருத்திகள் எழுவதும், விழுவதுமாக இருக்கின்றன. அந்த இரு செயல்களுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருப்பதால் அதை நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. தியானத்தின் போது ஒரே விருத்தி செயல்படும். அது மெதுவாக எழுவதும், விழுவதுமாக இருக்கும். இதை சாதகர் உணர்வார். சமாதி நிலையில் அடங்கி நிற்கின்றன. கர்ம பீஜம் முற்றிலும் அழியும் வரை அது அடங்கி நிற்கும் பிறகு எந்த வாசனையுமில்லை, விருத்தியுமில்லை. சர்வமும் ஒளிமயம். அதுவே சிவமயம்.
www.vediceternallife.blogspot.com